காதல் தோல்வி நிருபர் தற்கொலை

வேளச்சேரி: காதல் தோல்வியால் தரமணி பகுதியில் பத்திரிகை நிருபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தரமணி சி.கே.கபாலி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (27). பிரபல வார பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தரமணி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், மீனாட்சி சுந்தரம் காதலித்து வந்த பெண்ணுக்கு சமீபத்தில் வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்ததாகவும், இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ததும் தெரிந்தது. விரக்தியால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: