சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் குவிந்த 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் தினசரி கொட்டப்படும் குப்பை சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்ைம துறை மூலம் தினமும் சேகரிக்கப்படும். அதன்படி, தினசரி மாநகராட்சி பகுதிகளில் 5,300 டன் குப்பை சேகரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படும். இதைத் தவிர்த்து பண்டிகை நாட்களில் குப்பை அகற்ற சிறப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பை அகற்றும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 19 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து 40 டாடா ஏஸ் வாகனம் மூலம் சிறப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.