தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக வழக்கு சிறார்கள், பெரியவர்களை விடுவிக்க வேண்டும்: டிஜிபிக்கு விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: பட்டாசு வெடித்தவழக்கில் இருந்து சிறார்கள், பெரியவர்களை விடுவிக்க வேண்டும்” என்று போலீஸ் டிஜிபிக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா போலீஸ் டிஜிபிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தீபாவளி திருநாளில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு காலநிர்ணயம் செய்து அறிவிப்புகள் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பட்டாசு வெடித்தது சம்பந்தமாக மாநிலம் முழவதும் ஏறத்தாழ  2,370 வழக்குகள் பதிவு செய்யப்படிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே இந்த ஆண்டாண்டு கால மரபை மாற்றுவதற்கு காலம் ஒன்றே மாற்றாக இருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலம்  முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து வழக்கிலிருந்து சிறார்கள் மற்றும் பெரியவர்களை விடுவிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: