சென்னை: பட்டாசு வெடித்தவழக்கில் இருந்து சிறார்கள், பெரியவர்களை விடுவிக்க வேண்டும்” என்று போலீஸ் டிஜிபிக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா போலீஸ் டிஜிபிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தீபாவளி திருநாளில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு காலநிர்ணயம் செய்து அறிவிப்புகள் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பட்டாசு வெடித்தது சம்பந்தமாக மாநிலம் முழவதும் ஏறத்தாழ 2,370 வழக்குகள் பதிவு செய்யப்படிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.