மும்பை: ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ அதையே மோடி இந்தியாவுக்கு செய்ய விரும்புகிறார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார். மும்பையில் நேற்றுமுன்தினம் இரவு ‘சன்விதான் பச்சாவ் பரிஷத்’ என்ற நிகழ்ச்சிக்கு மும்பை காங்கிரஸ் ஏற்பாடு ெசய்திருந்தது. மல்லிகார்ஜூன் கார்கே இதில் கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜனதா ஆட்சியில் நாடு மோசமடைந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மற்ற அமைப்புகளை அழித்தது போல அரசியலமைப்பு சட்டத்தையும் அழிக்க நினைக்கிறார்கள். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அரசியலமைப்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது வகுப்பினருக்கு சொந்தமானது அல்ல. அது ஒவ்வொரு இந்தியனுக்கும் சம அளவில் சொந்தமானது.