அசாம்: அசாமில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தோலா மாவட்டத்தில் உள்ள கட்பாரி கிராமத்தை சேர்ந்த 6 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரின் உடல்கள் குண்டு, காயங்களுடன் பாலம் ஒன்றின் கீழே இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.