தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (73). இவர் தனது பதவிக் காலத்தின்போது கணவரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு வௌிநாடுகளில் இருந்து முறைகேடாக நன்கொடை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி கலீதாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த தண்டனையை அதிகரிக்கும்படி நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.