சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் விடுதி அறைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வாடகையை செலுத்துமாறு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் பெற தகுதியை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.