அமிர்தசரஸ் : ‘‘பஞ்சாபில் ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும்’’ என்று அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே கடந்த 20ம் தேதி நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது, தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரயில் மோதி 61 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியது. இதில், 46 பேரின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கப்பட்டு விட்டதாகவும்,. மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் இம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நேற்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: