காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி செல்ல முயன்ற 1000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யமஹா, என்பீல்டு இருசக்கர ஊர்தி நிறுவன தொழிலாளர்கள் 30 நாட்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று சென்னை ஒரக்கடத்தில் இருந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அனுமதி பெறாமல் பேரணி சென்றதாக அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.