தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள் : சென்னை புறநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

சென்னை : ஆயுதபூஜை, விஜயதசமி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முடித்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. திருச்சியில் இருந்து அதிகளவிலான மக்கள் சென்னை திரும்புவதால், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பொங்கல், தீபாவளி நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதால், முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. செங்கல்பட்டு சுங்கச்சாவடி, மகேந்திராசிட்டி, ராஜகுலப்பேட்டை, பரனூர் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அப்பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சுங்கச்சாவடி ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படும் என்று தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: