5 நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கடந்த 5-ம் தேதி பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைய தொடங்கியது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.84.64 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 29 காசுகள் குறைந்து 79.22 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: