கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

அந்தியூர்: இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தலைவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்குழு உறுப்பினர்கள், தலைவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம், மாவட்டத்திற்கு 5 ஆயிரம் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசியலுடன் ஆன்மிகத்தையும் கொண்டு செல்லும்போது சிறந்த ஆட்சியை செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: