கும்பகோணம்: கோவை எஸ்.பி.யாக இருந்தவர் மூர்த்தி. இவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை எஸ்.பி. மூர்த்தி, மயிலாடுதுறை செல்வதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் அணைக்கரை வந்து கொண்டிருந்தார். அப்போது எஸ்பி கார், முன்புறம் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. இதனை கவனித்த அணைக்கரை செக்போஸ்ட்டில் இருந்த நாடிமுத்து என்ற போலீஸ்காரர், எஸ்பியின் கார் என்று தெரியாததால், அந்த காரை மறித்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்பி மற்றும் உறவினர்கள், காரை மறித்த போலீஸ்காரர் நாடிமுத்துவை, தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. அப்போது சீருடை அணியாமல் இருந்த நாடிமுத்து உடனடியாக போலீஸ் உடையணிந்து வந்தார்.