நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தமிழக விவசாய பிரிவு காங்கிரஸ் பங்கேற்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவின் சார்பாக விவசாய பிரிவின் அகில இந்திய தலைவர் நானா பட்டோலின் தலைமையில் வருகிற 23ம் தேதி தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கு பெறும் இந்த பேரணி டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆலோசனையின்படி காங்கிரஸ் விவசாயப்பிரிவின் மாநிலத் தலைவர் பவன்குமார் தலைமையில் 250க்கும் மேற்பட்ட விவசாயப்பிரதிநிதிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொள்கிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: