சென்னை: சிபிஐ அதிகாரியாக நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து ெசய்யக்கோரி தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் பரமசிவம். இவர், கடந்த 2002 மே 13ம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ்காரர்களுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணி நீக்கம் சரிதான் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.