சென்னை: கரூர் மாவட்டம் வெள்ளியணை தாளியபட்டியை சேர்ந்தவர் நவநீதநாச்சிமுத்து (38). சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னை அடையாறில் உள்ள ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் சொகுசு விடுதி நிறுவனம் ஒன்று, உலகம் முழுவதும் தங்களுக்கு விடுதிகள் உள்ளன. ஆண்டுக்கு 3 நாட்கள் வீதம் தங்குவதற்கு ரூ.1.85லட்சம் செலுத்த வேண்டும். முதல் தவணையாக ரூ.18167 கட்ட வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்காக நவநீதநாச்சிமுத்து பணத்தை கட்டினார். மேலும் திட்டத்தில் சேர விருப்பம் இல்லை என்றால் 10 நாட்களில் பணம் திருப்பித்தரப்படும் என அறிவித்தது. அதன்படி நவநீதநாச்சிமுத்து பணத்தை திருப்பி தருமாறு விண்ணப்பித்தார். ஆனால் பணத்தை தராமல் ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடித்தனர். இதனையடுத்து 2015ம் ஆண்டு மே மாதம் கரூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.