சென்னை: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆன்றோர்ளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2017-18ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையின்போது, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள அமுதகவி உமறுப்புலவரின் மணிமண்டபத்தில், அவரின் பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உமறுப்புலவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு, உமறுப்புலவர் வாரிசுகள்,