திருப்பூர்: பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் ஒருபகுதியான ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூரில் நேற்று பேரணி நடத்தினர்.தமிழக அரசு கேரளாவிற்கு வழங்கும் தண்ணீரை நிறுத்தி பிஏபி பாசன விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இடைமலையாறு- நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்றினால் பிஏபி பாசன பகுதியான 4.25 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்களுக்கு முழு அளவில் நீரை கொடுக்கலாம் என்றும் கோரி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், நேற்று திருப்பூரில் கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.