டெல்லி; மத்திய பிரதேச மாநிலம் தாடியா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தாம் இதுவரை ஒரே முறை மட்டுமே பிரதமர் அலுவலகம் சென்றதாக குறிப்பிட்டார். அங்கு நேரில் சென்று பிரதமர் மோடியிடம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியதை நினைவு கூர்ந்தார். ஆனால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமரோ, ஏழைகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய கூறிய தமது கோரிக்கையை இறுதி வரை பொருட்படுத்தவேயில்லை என சாடினார்.