சென்னை: விபத்துகள் இல்லாத நகரத்தை உருவாக்கவும், அனைவருக்கும் போக்குவரத்து விதிகளை எளிதில் தெரிந்து கொள்ளவதற்காகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் நேப்பியர் பாலம் அருகில் ரூ.2 கோடி செலவில் போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது. இந்தப் பூங்காவில் சாலைகள் அமைக்கப்பட்டு அதில் அனைத்து விதமான போக்குவரத்து குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பூங்காவிற்கு வருபவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். அவர்கள் சைக்கிளில் செல்லும் போது சாலையில் உள்ள அனைத்து விதிகளையும் மதித்து செல்ல வேண்டும். இந்த பூங்காவில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ேஹாண்டா ேமாட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 12 போக்குவரத்து பூங்காக்களை பராமரித்து வருகிறது. இதன் அடிப்படையில்தான் ஹோண்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வயது வாரியாக பல்வேறு வசதிகள்