புனே: இந்தியாவின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான கனுப்பிரியா அகர்வால் ஆகா துர்காவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. முதல் தடவையாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்திருப்பது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் தனது பிறந்தநாளை புனேயில் கொண்டாடினார். கனுப்பிரியா கடந்த 1978 அக்டோபர் 3ம் தேதி பிறந்தார். புனேயில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக கனுப்பிரியா புனே வந்தார். முதல் முறை தனது பிறந்தநாளை மகாராஷ்டிராவில் கொண்டாடவிருப்பதாக கனுப்பிரியா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.