கேரளா கோரிக்கை ஏற்பு செஸ் வரி விதிப்புக்கு 7 பேர் குழு

புதுடெல்லி: கேரளாவில் வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்காக செஸ் வரி விதிப்பது தொடர்பாக 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் 30வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதுகுறித்து அருண்ஜெட்லி கூறியதாவது: மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை சீர்செய்ய நிதி  திரட்டுவதற்காக கூடுதலாக செஸ் வரி வசூலிக்க அனுமதிக்க கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிசீலிக்கப்பட்டது. இதில், செஸ் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

சில பொருட்கள் மீது ஒரு சதவீத கூடுதல் வரி விதிக்கவும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட அமைச்சரவை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் வடகிழக்கு, மலை பிரதேசங்கள்  மற்றும் கடலோர மாநில பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த வரியை கேரளாவுக்கு மட்டும் வசூல் செய்வதா அல்லது நாடு முழுக்க அமல்படுத்துவதா, ஆடம்பர அல்லது உடலுக்கு கேடு செய்யும் பொருட்கள் மீது வரி  விதிப்பதா என்பன தொடர்பாக ஆய்வு செய்யும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: