திருவிடைமருதூர்: ஆந்திராவில் விளைச்சல் அமோகமாக இருந்ததால் கும்பகோணத்தில் ஒட்டு மாங்காய் எனப்படும் கவுதாரி மாம்பழங்கள் தேக்கம் அடைந்தன. இதனால் ₹3.75 கோடி வர்த்தகம் பாதித்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள மாம்பழ சாறு தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பெரிய காய்கனி சந்தைகளில் இருந்து தினம்தோறும் தலா 100 டன் முதல் 200 டன் வரை மாம்பழம், மாங்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மாங்காய் (கவுதாரி மாம்பழம்) அதிகளவில் விளைச்சல் இருக்கும்.