மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டம்....பிரதமருக்கு நோபல் பரிசு : தமிழக பாஜ தலைவர் பரிந்துரை

சென்னை: மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பிரதமருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கை:பாரத பிரதமரின்  மருத்துவக்காப்பீட்டு திட்டம் பிரதமரால் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 50 கோடி மக்கள் பயன்பெறுவர். உலகிலே மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டம் இது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருக்கிறது. இதற்காக நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவர் பிரதமர் என்பது என் கருத்து. அதனால் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைக்கான கோரிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம். அனைவரும் என்னோடு இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைக்கான கடைசி தேதி வருகிற ஜனவரி 31ம் தேதி. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அறிவிப்பு செயல்முறைகள் தொடங்குகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தகுதி பெற்ற  அனைவரும் பிரதமரை நோபல் பரிசுக்கு பரிந்துரை  செய்யலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: