தூத்துக்குடி: இறக்குமதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணலை, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மலேசிய மணலை பெறுவதற்கான இணையதள பதிவு நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 1 மெட்ரிக் டன் 9500 ருபாய் என்ற விலைக்கு மணலை பெறலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.