ஐடி ஊழியர் வீட்டில் கள்ளக்காதலி தற்கொலை

ஆவடி: கொரட்டூர் டிவிஎஸ் நகரில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் கள்ளக்காதலி தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.அம்பத்தூர், கொரட்டூர் டிவிஎஸ் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜேக்கப்ராஜ் (32) இவரது மனைவி மீனா (26). தம்பதி இருவரும் ஐ.டி நிறுவன ஊழியர்கள். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.  கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சில ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ஜேக்கப்ராஜ் தனது 10 ஆண்டு தோழியான நர்மதா (30) என்ற பெண்ணை வீட்டில் தங்க வைத்து  மனைவி சம்மதத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் கம்பெனி வேலை தொடர்பாக, மீனா தனது குழந்தையுடன் புதுச்சேரி சென்றார். ஜேக்கப்ராஜ் இரவு பணிக்காக கம்பெனிக்கு சென்றார். வீட்டில் நர்மதா தனியாக இருந்தார். நேற்று காலை, ஜேக்கப்ராஜின்  அண்ணன் தாமஸ் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து உள்ளே சென்றபோது, படுக்கை அறையில் நர்மதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொணடு சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி  அடைந்தார்.இதுகுறித்து கோரட்டூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேக்கப்ராஜ் மற்றும் மீனா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: