சென்னை: நீதிமன்றம் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் சுதா புகாரின்பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.