காந்தி மரணத்திற்கு தாம் காரணம் இல்லை: காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி மனு

சென்னை: சின்னத்திரை நடிகை நிலானியின் ஆண் நண்பர் காந்தி மரணமடைந்ததை தொடர்ந்து நிலானியை கே.கே.நகர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் காந்தி மரணத்திற்கு தாம் தான் காரணம் என்று தேவையின்றி வதந்தி பரப்பப்படுவதாக நிலானி புகார் அளித்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய காந்தி  தம்மிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தார். அவர் மரணத்திற்கு தாம் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தேவையின்றி வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காதலை கொச்சைப்படுத்தி புகார் அளித்ததால் விரக்தியடைந்த நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இதன் பின்னர் காந்தியும் நிலானியும் நெருக்கமாக இருப்பது போன்று பல வீடியோ ஆதாரங்களையும், புகைப்பட ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டனர். தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக புகார் அளித்த நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் காந்தி மரணத்திற்கு தாம் காரணம் இல்லை என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலானி புகார் மனு அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: