சேலம் மார்க்கெட்டுக்கு ஆந்திரா சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு

சேலம்: ஆந்திராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 50 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வருகிறது.ஆந்திராவில் ராஜமுந்திரி, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு  அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது. இது குறித்து சேலம் கடைவீதி மொத்த  சாத்துக்குடி வியாபாரிகள் கூறுகையில், ‘ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். சில நாட்களாக 50 டன்னுக்கு  மேல் விற்பனைக்கு வருகிறது. எதிர்வரும் வாரத்தில் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும். தற்போது அளவு பொறுத்து ஒரு கிலோ (மொத்த விலையில்) சாத்துக்குடி ₹20 முதல் ₹60 என விற்பனை  செய்யப்படுகிறது,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: