நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திரத்தினத் திருநாள் வாழ்த்து ..

சென்னை : நாட்டு மக்கள் அனைவர்க்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் சாதி, மத பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்துக்காக இன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அகிம்சை மூலமே அடிமை விலங்கை தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு என்று கூறியுள்ளார். இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம் மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: