சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இது தேசத்தின் அவமானம் என்று கருதப்பட வேண்டும். இதற்காக 15ம் தேதி (நாளை) மாலை 4 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.