ராமநாதபுரம்: போலி மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி.க்கு லஞ்சம் தர ₹2.80 லட்சம் வசூல் செய்து கொண்டு வந்தவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்தவர் முருகன். இவர் இப்பகுதியில் போலி மது விற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக போலீஸ் கெடுபிடி அதிகமாகியுள்ளது. இதனால் தொழில் செய்ய முடியவில்லை. எனவே கெடுபிடியை தளர்த்த, லஞ்சம் கொடுக்க முடிவு செய்துள்ளர். இதற்காக அதே பகுதியை சேர்ந்த மற்ற போலி மது விற்பவர்களிடம் இருந்து மொத்தம் ₹2.80 லட்சம் வசூல் செய்தார். இதை கொடுப்பதற்காக ராமநாதபுரம் மது விலக்கு பிரிவு ஏடிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று முருகன் வந்தார்.