ஆடிக் கிருத்திகையையொட்டி வெள்ளி வேல் விற்பனை அமோகம் : நகை வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆம்பூர்: ஆடிக்கிருத்திகையையொட்டி ஆம்பூரில் வெள்ளி வேல் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆடிக் கிருத்திகையையொட்டி  வரும் 4ம் தேதி பரணி காவடியும், 5ம் தேதி ஆடி கிருத்திகையும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கைலாசகிரி, ஞானமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை மீது உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆம்பூர், பெரியாங்குப்பம், உம்ராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணி, பழனி, ரத்தினகிரி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களுக்கு நடைபயணமாக சென்று நேர்த்தி கடன் செலுத்துவர்.

பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து சென்று வழிபட்டாலும், உண்டியல்களில் முருகனுக்கு உகந்த வெள்ளி வேல் காணிக்கை செலுத்துவது வழக்கம். இதையொட்டி 4 கிராம் முதல் 8 கிலோ வரையிலான வெள்ளி வேல் தயாரிக்கும் பணி ஆம்பூரில் உள்ள ஷராப் பஜாரில் மும்முரமாக நடந்த வருகிறது. திறமையான தொழிலாளர்களை கொண்டு இந்த வேல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூருவை சேர்ந்த வியாபாரிகளும், ஆம்பூர் வந்து வெள்ளி வேல்களை வாங்கி செல்கின்றனர். வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளதால் நகை செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: