பட்டாசு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டு என்ற வழக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பட்டாசுக்கு தடை கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக்பூஷண் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டாசு உற்பத்திக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம் தனது வாதத்தில், “பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி விவகாரத்தில் சுற்றுச்சூழல், பொதுமக்களின் சுகாதாரம், அவர்களின் உடல்நிலை ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: