தஞ்சையில் 23, 26ம் தேதி விமானப்படைக்கு ஆள் தேர்வு

திருச்சி: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 23 மற்றும் 26 தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் 1998 ஜூலை 14ம் தேதி முதல் 2002ம் ஆண்டு ஜூன் 26ம் தேதிக்குள் பிறந்த, ஆண்கள் கலந்து கொள்ளலாம். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயரியியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தப்பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முகாமில் கலந்து கொள்பவர்கள் 10 வகுப்பு மற்றும் பிளஸ்-2 சான்றிதழ்களுடன் வர வேண்டும். சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களில் கொடுத்திருப்பவர்கள், சுயசான்றொப்பம் இட்ட தங்களது சான்றிதழ்களில் தங்களது கல்வி நிறுவன முதல்வரிடம் இருந்து சான்றொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும்.

23ம் தேதி அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், புதுகை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், 26ம் தேதி கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும், காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: