காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நாளை தமாகா பொதுக்கூட்டம் : ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு எம்எம்டிஏ காலனியில் தமாகா சார்பில் நாளை பொதுக்கூட்டம் நடப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காமராஜரின் 116வது பிறந்த தினம் நாளை (ஜூலை 15) நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காமராஜருக்கு நிகர் அவரே. ஏனென்றால் தமிழகத்தில் காமராஜர் சிறு வயது முதல் தான் வாழ்ந்து முடித்த காலம் வரை அவர் வாழ்ந்த விதம், மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாமே தமிழக மக்கள் நலன் காக்கத்தான்.

அத்தகைய தலைவரின் 116வது பிறந்த தின விழாவை தமாகா சார்பில் நாளை சென்னை, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கத்தில் உள்ள பால்பூத் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். நாட்டிற்காக கடினமாக உழைத்த காமராஜரின் புகழைப் பரப்புவதில் த.மா.கா. தொடர்ந்து தனது பங்களிப்பை மேற்கொண்டு வருகிறது. காமராஜர் ஆட்சி போன்று நல்லாட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஊழல், லஞ்சம், சுரண்டல் ஆகியவற்றிற்கு இடம் இருக்காது என்பதையும் வலியுறுத்துகிறோம். பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: