அறந்தாங்கி அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இந்த எல்கை பந்தயப் போட்டியில் முதலாவதாக வந்த திருமயம் பரளி செல்வி மாட்டு வண்டிக்கு ரூ.22,001ம், 2வது வந்த பிராமணவயல் சுந்தரம் மாட்டு வண்டிக்கு ரூ.19001ம், 3வது வந்த கூத்தாடிவயல் தரண் தருண் மாட்டு வண்டிக்கு ரூ.16,001ம் பரிசாக வழங்கப்பட்டன.

நடுமாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. முதலாவதாக வந்த கே.புதுப்பட்டி கலை ஹாலோபிளாக் மாட்டு வண்டிக்கு ரூ.19,001ம், 2வது வந்த செல்வனேந்தல் சுந்தர்ராஜன் மாட்டு வண்டிக்கு ரூ.16,001ம், கூத்தாடிவயல் சண்மதிசாருமதி மாட்டு வண்டிக்கு ரூ.13,001ம் பரிசாக வழங்கப்பட்டன. கரிச்சான்மாடு பிரிவில் 21 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. முதலாவதாக வந்த வீரராகவபுரம் கரிமூட்டம் மாட்டு வண்டிக்கு ரூ.16,001ம், 2வது வந்த என்.டி.பட்டி வீரணன் மாட்டு வண்டிக்கு ரூ.13,001ம், 3வது வந்த எல்.என்.புரம் பாஸ்கர் மாட்டு வண்டிக்கு ரூ.11,001ம் பரிசாக வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை கூத்தாடிவயல் யாதவர் சமூகத்தார்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: