பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,200 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால், அங்கு 3வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து உபரிநீர் மீண்டும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று விநாடிக்கு 10,200 கனஅடியாக சரிந்தது. இதையடுத்து, மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனால் பரிசல் சவாரிக்கு 3வது நாளாக தடை நீடித்தது.