காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..... காவலர் வீரமரணம்

ஆனந்த்நாக்: காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுவாரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

alignment=
இதனைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கு மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கூடுதலாக பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
alignment=
பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் ஆனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுவாரா பகுதியில் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளதாக அம்மாநில டிஜிபி வைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: