திருப்பூர் : திருப்பூரில் முன்னணி நிறுவன பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 5000 லிட்டர் கடலை எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. தரமற்ற அங்கீகாரம் இல்லாத கடலை எண்ணெய் முன்னணி நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்டது தெரியவந்தது. கடலை எண்ணெய் கடைகளுக்கு விற்பனை செய்த போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பறிமுதல் செய்தனர்.