சென்னை: சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பியவரை காலையில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக வாஞ்சிநாதன் மீது வழக்கு உள்ளது. வழக்கில் வாஞ்சிநாதனுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்தது குறிப்பிடத்தக்கது.