சென்னை: திருப்பூர் அருகே பிடிப்பட்ட ரூ.570 கோடி பற்றிய சிபிஐ அறிக்கை நகல் கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. நீதிபதி சுப்பையா முன் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் முறையிட்டார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம் பிடிப்பட்டது. எந்த ஒரு ஆவணமும் இன்றி கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பிடிப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்த திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீமன்ற நீதிபதி சுப்பையா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.