சென்னை: லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட போவதில்லை என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளன. டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் முக்கிய 3 கோரிக்கைகளில் ஒன்றாகும். இவற்றை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய தரை வழி வாகன போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.