குன்னூர்: குன்னூர் அருகே உள்ள வெங்லிங்டன், ஆரஞ்சுகுரோவ், பேரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்த வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை, வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை பதம் பார்த்து செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். இதை அடுத்து வனத்துறை சார்பில் ஆரஞ்சுகுரோவ் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.