ஷாஜகான்பூர்: பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜ.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது இவரது பெண் சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதில், ‘சுவாமி சின்மயானந்தா என்னை ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் கர்ப்பமான என்னை கருக்கலைப்பு செய்ய மிரட்டினார்’ என கூறியுள்ளார். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சின்மயானந்தா தடை பெற்றிருந்தார்.