புதுச்சேரி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தின்போது, புதிய பஸ் நிலையம் அருகே மறியல் செய்து கைதான திமுக எம்எல்ஏ சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை புதுவை முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.