திருவனந்தபுரம்: கேரளாவில் 28ம் தேதிவரை மிக பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் ெதன்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி ெதாடங்கும். ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் இது தொடர்பாக கேரளாவின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 28ம் தேதிவரை கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யும்.