சூதாட்டம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மார்ட் வாட்ச் அணியக் கூடாது என்று பாகிஸ்தான் வீரர்ரகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து-பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் பேட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னில் சுருண்டது.