மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த நகை வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. குஜராத்தை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் போலி உத்தரவாத கடிதங்களை பெற்று, தேசிய வங்கிகளில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. அவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யும் முன்பே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டனர். நீரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து ஏற்கனவே இரண்டு குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.