சென்னை: இந்த நேரத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் தவறு என சுட்டிக்காட்டத்தான் போராட்டம் நடத்தப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மக்கள் பாதித்துள்ள நிலையில் அலுவல் ஆய்வு கூட்டம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ள முதல்வர் தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினர். நீங்கள் ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள் என்று அவர் கூறினார்.